Sunday 3 January 2016

நூல் 1





ஒரு சில சிறுவர்களுக்கான புத்தகத்தை படித்த மற்றும் சிறுவர்களுக்கான எழுத்தாளர்களுடன் பேசியதில் இருந்தும் நல்ல கதையானது எப்பொழுதும் ஏதேனும் நீதிநெறிகளை கூற தேவையில்லை , குழந்தையின் மனவெளியில் பயணிக்கவைப்பதாகவும் அவர்களை உற்சாகமூட்டுவதும் அதிமுக்கியம் என்பதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு நான் குழந்தைகளுக்கு கதை சொல்ல தேர்ந்தெடுக்கும் தன்மைகளும் மாறிப்போனது. 

அந்த விதத்தில் இரா . நடராசன் மொழிபெயர்த்துள்ள "நீ எறும்புகளை நேசிக்கிறாயா?" குழந்தைகளுக்கான புத்தகம். 7 கதைகளில் 3 குழந்தைகளுக்கான நீதிநெறிகள் மற்றும் அறிவுரைகளை தாங்கியுள்ளது. மற்றவை குழந்தைகளுக்கான பயணமாக உள்ளது. 2006 ல் குழந்தையாக இருந்த ஜோ வின் கைவண்ணத்தில் ஓவிங்கள் , ஓவிங்கள் மட்டுமல்ல கருத்து சித்திரங்களும் கூட.

 மந்திர கம்பளத்தில் ஓவியமும்,
 பேய் என்கிற ஒன்று இல்லை என்பதில் சமூகத்தில் பிணம் பேய் சார்ந்து நம்பப்படும் தேவையற்ற மூடநம்பிக்கையும், தந்தைக்கு மகனின் மீதுள்ள அக்கறையும் , உழைப்பின்றி ஏதும் நிரந்தரம் அல்ல என்பதும் விளையாட்டாய் நகர்ந்துள்ளது. 

தொலைந்தவர்கள் உலகம் வேடிக்கையாய் ஆரம்பித்து குழந்தைகளின் புத்திகூர்மையெம் , அதன்மூலம் உட்கொள்ளும் உணவில் எது தேவையென்றும் விளக்கும் விதமாக உள்ளது.  

ஓய்வு .... மகனே ... ஓய்வு.... யில் ஒத்த வயது  குழந்தைகளின் தானே பெரியவன் தனக்கு மற்றவர்களைவிட அதிகம் தெரியும் எனும் மனவோட்டமும் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவர்க்குள் என்பதில் இராசியான ஆசிரியர் எவ்வாறு வெறுக்கப்பட்டார் என்றும், பக்கத்து வீட்டுக்காரர் என்பதில் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஆசிரியர் எவ்வாறு நேசிக்கப்பட்டார் என்று எடுத்து இயம்புகிறது. 

மணிமகுடமாய் உள்ள நீ எறும்புகளை நேசிக்கிறாயா என்ற கதை என் மனதில் குழந்தைகளுக்கான வெளியை நெருக்கமாக விவரித்து உள்ளது. இதனை படித்த பிறகு மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்த  மற்ற கதைகளிலோ மொழிப்பெயற்பிளோ இந்த நெருக்கம் , தெளிவு மிஸ்ங் எனும் பிம்பத்தையோ உணர்வையோ ஏற்படுத்துகிறது. 

குறிப்பு :1  
           இதனை படித்து கதை சொல்ல முயற்சிப்பதைவிட குழந்தைகளுக்கு பரிசளிப்பது சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. இது குழந்தைகளுக்கான புத்தகம் . 

குறிப்பு: 2 
   அவர்கள் இருவருக்குள் படிப்பது தனிகலை . உபயோகப்படுத்தியுள்ள சுமார் 15 சீன பெயர்களை நினைவில் நிறுத்தி பக்கங்களை புறட்டாமல் கதையை படித்து முடிப்பவரின் நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ்

4 comments:

  1. மொபைலில் இவ்வளவு தட்டச்சு செய்வது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.

    பாராக்களாகப் பிரிக்கவும். படிக்க ஏதுவாக இருக்கும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete